Friday, July 1, 2011

ஆயுதங்களற்ற புரட்சி கூட சாத்தியமாகலாம், ஆனால் புத்தகங்களற்ற புரட்சி சாத்தியமில்லை

உலக நாடகமேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறந்த தினமான (சிலர் நினைவு தினம் என்றும் கூறுகிறார்கள்) ஏப்ரல் 23 - உலக புத்தக தினமாக கொண்டாட படுகிறது. சிலர் ஸ்பெயின் நாட்டின் எழுத்தாளர் செர்வாண்டிஸ் என்பவரது பிறந்த தினம் என்றும் சொல்கிறார்கள்.
நல்லவேலை, நல்லசம்பளம் என்ற குறிக்கோளுடன் மட்டுமே பள்ளிகூட பாடபுத்தகங்கள் உருவாக்கப்படுகின்றன. முழுமையான, சமுக அக்கறையுள்ள மனிதனை உருவாக்குபவையாக பாடபுத்தகங்களுக்கு வெளியே உள்ள புத்தகங்களே நமக்கு உதவுகின்றன.
புத்தகங்களை பற்றி சில பழமொழிகளும், சில தலைவர்களின் கருத்துக்களும்
அடுத்த தலைமுறைக்கு பரிசாக ஏதுவும் தரவிரும்பினால் புத்தகங்களை கொடுங்கள் - சீனப்பழமொழி
வாசித்ததால் வாழ்ந்தேன் - நெல்சன் மண்டேலா
உன் மனைவிக்கு ஒரு முழம் பூ வேண்டாம் புத்தகம் வாசிக்க கொடு - பெரியார்
வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே - மார்க் ட்வெய்ன்
புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக்கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது - பகத்சிங்
புத்தகங்கள் பயங்கமான போராட்ட ஆயுதங்கள் - மார்டினா லூதர் கிங்
மனிதனின் ஆகப்பெரிய கண்டுபிடிப்பு புத்தகங்கள் - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
நல்ல புத்தம் வாசித்து முடிக்கப்படுவதே இல்லை - ஆர்.டி. கம்மிஸ்
காலக்கடலில் நமக்கு வழிகாட்ட அமைத்தப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம் - எட்வின் .பி. விப்பின்
புதிய புத்தகத்தை வாசிக்கும் போது புதிய நண்பனை சந்திக்கிறோம், அதை மீண்டும் வாசிக்கும் போது நீண்டகால நண்பனை சந்திக்கிறோம் - சீனப்பழமொழி
எப்பொதும் நல்ல புத்தகங்களை படியுங்கள், அதைப்பாதி படித்துக்கொண்டிருக்கும் போது ஒருவேளை நீங்கள் இறந்து போனாலும், அப்போதும் இனிமையான முகம் கொண்டு இருப்பீர்கள் - ஓ.ருர்கே
திரும்பத் திரும்ப திறந்து பார்த்துக் கொள்ளும் பரிசாக புத்தகங்கள் இருக்கும் - கேரிசன் கெயிலர்
எனவே திருமணங்கள், பிறந்தநாள் பரிசாக புத்தகங்களை கொடுங்கள்.குழந்தைகளுக்கு புத்தக வாசிப்புபழகத்தை ஏற்படுத்துங்கள். ஏன் என்றால் ஆயுதங்களற்ற புரட்சிகூட சாத்தியமாகலாம், ஆனால் புத்தகங்களற்ற புரட்சி சாத்தியமில்லை.

புதன் என்னும் மாயகிரகம் !

புகழ்பெற்ற வானியல் விஞ்ஞானி கோப்பர்னிக்கஸ் மரணப்படுக்கையில் கிடக்கும் போது கடைசிவரை என்னால் புதன் கிரகத்தைப் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்ததுடன் கூறினாராம். அவரால் பார்க்க முடியாமல் போனாலும் தற்போதைய தலைமுறைக்கு புதன் கிரகத்தின் படங்களையும், அதைபற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பை மெசஞ்சர் விண்கலம் ஏற்படுத்தியிருக்கிறது.
சூரியகுடும்பத்தின் முதல்கிரகம் புதன். பூமியை போல புதன் தன்னை தனே சுற்றிக்கொள்வதில்லை. சூரியனை சுற்ற அது எடுத்துக்கொள்ளும் காலம் 88 நாட்கள். சூரியனிலிருந்து 6 கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.அதன் பகல் பொழுது வெப்பம் 400 டிகிரி செல்சியஸ், இரவு பகுதி வெப்பம் - 260 டிகிரி செல்சியஸ்.ஒருசெகண்டிற்கு 29.4 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றுகிறது. பூமியில் 18 புதன் கிரகங்களை போட்டு நிரப்பிவிடலாம், அந்த அளவுக்கு சிறியது. இது போன்ற தகவல்களை தொலைநோக்கிகள், கணக்கீடுகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள்.
1973ம் ஆண்டு அமெரிக்காவால் அனுப்பட்ட மாரினார் 10 விண்கலம் ஒரு புதிய தகவலை சொன்னது. புதன் கிரகத்தின் அடர்த்தி அதிகம். வெள்ளி, பூமி, செவ்வாய் கிரகங்களில் பாறை பகுதி 70 சதமாகவும் 30 சதம் இரும்பு உள்ளடக்கமாகவும் இருக்கிறது.புதனில் 30 சதம் பாறை பகுதியும், 70 சதம் இரும்பு உள்ளடக்கம் கொண்டதாகவும் இருக்கிறது.
1977ம் ஆண்டு அனுப்பட்ட வாயேஜர்- 2 விண்கலம் வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன் கிரகங்களை ஆராய்ந்துவிட்டு சூரியமண்டலத்தின் எல்லையைத் தாண்டி சென்றுவிட்டது. வியாழன் கிரகத்தை கலிலியோ விண்கலம் 1995 முதல் 14 ஆண்டுகள் ஆராய்ந்தது. 2004ம் ஆண்டு முதல் சனிகிரகத்தை காசினி விண்கலம் சுற்றி வருகிறது. வெள்ளி கிரகத்தை மெகல்லன் விண்கலம் போன்ற பல விண்கலங்கள் மூலம் ஆராயப்ட்டுள்ளது. ஆனால் புதன் கிரகத்தின் மீது விஞ்ஞானிகளின் பார்வை திரும்பவேயில்லை.
புதன் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவதில் பிரச்சனைகள் உண்டு. பூமியானது சூரியனில் இருந்து சுமார்15 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. புதன் சூரியனிலிருந்து வெறும் 6 கோடி கி.மீ. தெலைவில் உள்ளது.புதன் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சூரியனை நோக்கி அனுப்புவதற்கு சமம்.இதில் இரண்டு பிரச்சனைகள் உண்டு. வெப்பம் அதிகரிக்கும், மேலும் விண்கலத்தின் வேகம் அதிகரிக்கும்.புதன் கிரகத்தை செல்வதற்கு பதிலாக சூரியனைநோக்கி சென்று சாம்பலாகிவிடும். புதன் கிரகத்தை நெருங்கி புதன் கிரகத்தின் ஈர்ப்பு பிடியில் சிக்குகிற அளவுக்கு விண்கலத்தின் வேகம் குறைந்தால்தான் விண்கலம் புதன் கிரகத்தை சுற்ற ஆரம்பிக்கும்.வேகத்தை குறைப்பது தான் பிரச்சனை
2004 ஆகஸ்டில் அனுப்பபட்ட மெசஞ்சர் வினாடிக்கு 640 கிலேமீட்டர் வேகத்தில் பயணம் செய்தது.இதன் வேகத்தை படிப்படியாக குறைக்க புதிய வழி கையாளப்பட்டது.இதன் படி மெசஞ்சர் விண்கலம் சூரியனை ஒரு சுற்றுசுற்றிவிட்டு மறு ஆண்டு ஆகஸ்டில் பூமியை நெருங்கியது. அப்போது அதன் வேகம் சற்று குறைந்தது.பின்னர் மேலும் சில சுற்றுகள் சுற்றிவிட்டு வெள்ளி கிரகத்தை 2006 - மற்றும் 2007ம் ஆண்டில் கடந்து சென்றது. அதனால் மேலும் வேகம் குறைக்கப்பட்டது. பின்னர் சூரியனை மேலும் சிலமுறை சுற்றிக்கொண்டே புதன் கிரகத்தை நெருங்கியது.இந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி புதன் பிடியில் சிக்கி சுற்ற ஆரம்பித்தது. அமெரிக்க நாசா விண்வெளி அமைப்பை சேர்ந்த சென்வான்யென் எனபவர்தான் மெசஞ்சர் விண்கலத்தின் பாதையை திட்டமிட்டு கொடுத்தார். பூமியிலிருந்து புதன் கிரகம் அதிகபட்சமாக 22 கோடி கிலோமீட்டர் துரத்தில் தான் உள்ளது. 2004 ம் ஆண்டில் செலுத்தபட்ட மெசஞ்சர் ஆறரை ஆண்டுகாலம் விண்ணில் அங்கும் இங்குமாக வட்டமடித்து புதனை நெருங்கிய போது அது பயணம் செய்த தூரம் 790 கோடி கிலோ மீட்டர்.சூரியனின் அதிகமான வெப்பத்தை தாங்க காப்பு கேடயம் தாயாரிக்க மட்டும் 7 ஆண்டுகள் பிடித்தன.மேலும் விண்கலத்தை உருவாக்கதிட்டம், அதை செய்துமுடிக்க ஆகும் காலம், பாதை உத்திகளை உருவாக்க என சுமார் 20ஆண்டுகள் பிடித்தன.
மெசஞ்சர் விண்கலம் 363 புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளது. அதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் இருட்டு பகுதியில் ''டெபுசி'' என்று அழைக்கப்படுகிற கதிர்வீச்சு காணப்படுவதாகவும். அதன் பகல் பகுதியும், இருள்பகுதியும் சந்திக்கும் பகுதியில் ஒளிவட்டம் போன்ற வளையம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். மெசஞ்சர் மேலும் அனுப்புகிற தகவல்களை கொண்டு புதன் என்னும் மாய உலகத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
புதன் கிரகத்தை பற்றி ''பொன் கிடைக்தாலும் புதன் கிடைக்காது'' என்ற மிக பிரபலமான சொலவடை தமிழகத்தில் உள்ளது. புதனை வெறுங்கண்ணால் பார்க்க இயலும் என்றாலும் எளிதில் தென்படாது. சூரியனுக்குப் பக்கத்தில் இருப்பதால் அதிகாலையில் கிழக்குப்பக்கம் சூரிய உதயதிற்கு முன்னால் சிறிது நேரம் தெரியும், அல்லது மாலை நேரம் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மங்களான சிறிய புள்ளியாகத் தெரியும். மெசஞ்சர் விண்கலம் மூலமாக புதன் கிடைத்து விட்டது. பொன்(தங்கம்) தான் எட்டமுடியாத அளவிற்கு விலை ஏறிக்கொண்டே போகிறது
By-hari

இணைய இணைப்பே இன்றி தமிழில் எழுத இங்கே படிக்கவும்..

இந்த சுட்டியை நகலெடுத்து மேலுள்ள உங்களின் உலாவியிலிட்டு இணைப்பை சொடுக்கவும்http://www.google.co.in/transliterate/indic/Tamil
http://www.google.co.in/transliterate/indic/Tamil  இப்பக்கத்தில் சென்று இணைய இணைப்பு மூலம் தமிழில் தட்டச்சு செய்து, பிறகு அதை அங்கிருந்து நகலெடுத்து எங்கு வேண்டுமோ அங்கு பதிந்துக் கொள்ளளாம்.
ஆனால் அதில் ஒரு கோளாறு நேரலாம், என்னவெனில், ஒருமுறை புதுப்பித்துவிட்டால் பழவி அத்தனையையும் இழக்க நேரிடும்.
எனவே இப்பக்கத்தில் வலது புறத்தில் New! Download Google Transliteration IME என்று இருக்கும் அதை சொடுக்கினால் வேறொரு புதிய பக்கம் திறக்கும். அதன் வலதுபுறத்தில்Download Google IME என்றிருக்கும். அதற்கு மேலே IMEக்கு சென்று தமிழ் என்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டு தரவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
இதை ஒருமுறை செய்துவிட்டால், அதன் பிறகு இணையத்தின் அவசியமின்றி வேர்ட் பைலில் கூட எழுதலாம். இணையத்தில் வலைத்தளம், முகநூல், இத்யாதி.. இத்யாதி.. என எங்கு வேண்டுமாயினும் உச்சரிப்பின் படி தட்டச்சு செய்து ஸ்பேஸ் கொடுத்தால் போதும், தமிழில் எழுத்துக்கள் அழகாக பிறக்கும்!
மிக்க நன்றி!

கண்டிப்பா படிங்க – திருக்குறளில் வாழ்வியல்!!

பிறக்கும் ஒவ்வொரு உயிரும் தன் வாழ்தலுக்கிடையே உண்டாகும் இடர்பாடுகளின் விளிம்பில் நின்று, ‘கடைசியாய் காலத்தையே சபித்து நிற்கிறது, என்றாலும், காலம் தன் வாழ்தலின் கொடூரத்திலும், உண்ணதத்திலும், நன்மையிலும், தீமையிலும், சரி என்பதிலும், தவறு என்பதிலும், உண்மையிலும், பொய்யிலும்; தன்னைத் தானே புடம் போட்டு தனக்கான வேள்வியில் தானே தன்னை சுட்டு மிளிரும் தங்கமென பூத்து, நாளைய கேள்விக்கான பதில்களையெல்லாம் இன்றே நமக்காய் சேகரித்து யாரோ ஒருவரின் கைகளில் கொடுத்துவைக்காமல்; காலம் நகர்வதேயில்லை.
அப்படி – நமது இன்றைய தேவைகள் அத்தனையையும், ‘அன்றே ‘இரண்டாயிரமாண்டு முன்னரே திருவள்ளுவர் எனும் ஒரு காலத் தச்சனின் கையில் காலத்தால் நமக்கென கொடுத்து வைக்கப் பட்ட பொக்கிஷம் தான் திருக்குறள்.
// இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல் // என்று மனப்பாடம் செய்து அன்று தேர்வில் எழுதியது தவிர, எத்தனை பேர் நம்மில் ஒரே ஒரு குறலை வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழப் பழகியிருப்போம்???!!!
என்னை கேட்டால்; நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறில்லை என்று மனசாட்சியை ஒரு புனித புத்தகத்தின் மீது கை வைத்து சத்தியப் பிரமாணம் எடுப்பவர்கள்; திருக்குறளை முழுமையாய் உணர்ந்து படித்திருப்பார்களெனில் ‘படித்து வாழ்ந்திருப்பார்களெனில் அவர்களுக்கு அங்ஙனம் ஒரு நிலைக்குச் செல்ல வாய்ப்பே அமைந்திருக்காது. அதோடு மட்டுமல்லாமல் அங்ஙனம் சத்தியப்பிரமாணம் எடுக்கக் ‘தமிழருக்கென்று புனித நூலாய் ‘திருக்குறள்’ எனும் மாபெரும் படைப்பு ஒன்றே போதுமானதாகவும் இருந்திருக்கும். காரணம் –
வாழ்வியலின், உலக மனிதர்களுடைய நடத்தையின், ஒவ்வொரு அசைவையும் தமிழன் எனும் பதத்தில், தமிழனின் வாழ்வு முறையின் உத்தியில்; வாழும் ஒவ்வொரு உயிர்க்கும், ‘வாழ்தலை சொல்லித் தரும் உலகப் பொதுமறை, நமக்குக் கிடைத்த பொக்கிஷம் திருக்குறள்.
ஒரு மனிதன் பிறக்கும்போதே அவன் பிறகு எப்படி வளர்க்கப் படவேண்டும், எப்படி இவ்வுலகில் வாழவேண்டும், எந்த கண்கொண்டு இவ்வுலகை காணவேண்டும், எந்த தருணத்தில் தன்னை எப்படி வைத்துக் கொள்ளவேண்டும் என்பதுமுதல், வாழ்வின் கடைசித் தருணத்தில் நாம் கரைந்துப் போவது வரை திருக்குறளின் மூலம் திருவள்ளுவரேச் சொல்கிறார்.
// நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு // இப்படி ஒரு குரல் முடிகிறது. இக்குறளில் –
இயற்கை என்பது இப்படித் தான்; நீ நல்லது செய்தாலும் அது தீமையாகலாம், நீ செய்யும் தீயதும் சிலவேளை நன்மையாக முடியலாம், எனவே காலத்தின் எந்த ஒரு கடவிற்கும் நீ மட்டுமே காரணமென்றெண்ணி  நீ உடைந்து விடாதே என்கிறார். மேலும், இந்த இயற்கையின் படைப்பே இப்படித் தான் இருக்கிறதென்று நமக்கு ஆறுதல் வார்த்தையை தருவதோடு நில்லாமல், இன்று நீ செய்யும் நன்மை தீயவை ஆவதும், தீயவை நன்மையாவதும் கூட என்றோ நீ செய்த உன்  ஊழ்வினையால் தான். எனவே, நாளைய வாழ்விற்கு இன்றே உன்னைச் சரிபடுத்தி வைத்திரு’ எனும் ஞானப் பாடத்தையும் இந்த இரண்டு வரிகளில் தருகிறார் திருவள்ளுவர்.
ன்று நாம் வெளி உலகில் நிறைய பேரை பார்க்கிறோம், உண்பதற்கு உணவிருக்காது ஆனால்; உணவு மேல் ஆசை பொங்கும், சிலருக்கு உணவு கொட்டிக் கிடக்கும் ஆனால் உண்பதற்கு காலமோ சூழலோ உடல்நிலையோ இடம் தருவதில்லை, காரணம் அதை கூட நாம் வாழும் நெறியே தீர்மானிக்கிறது என்கிறார். நாம் வாழும் பக்குவம் மட்டுமே நமக்கு எதையுமே ஈட்டுத் தருகிறது அன்றி வேறில்லை என்கிறார் திருவள்ளுவர்.
// வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது // எனும் குறளில் என்னதான் கோடி பொருள் சேர்த்திருந்தாலும் அதிலும் நமக்கென இத்தனைத்தான் விதிக்கப் பட்டுள்ளது. அந்த எத்தனை விதிக்கப் பட்டுள்ளதோ அத்தனையை -மட்டுமே நம்மால் அனுபவிக்க இயலும் அல்லாது எது நமக்கு இருந்தும் அவைகள் இல்லாத பொருளுக்கே சமம் என்கிறார்.
ஆனால், அந்த விதிக்கப் பட்டது என்பது யாரோ வந்து நம் தலையில் எழுதி விட்டு சென்றது என்று அர்த்தம் கொள்வதைக் காட்டிலும், நாம் நேற்று வாழ்ந்த வாழ்க்கை எப்படி இன்றினை முடிவு செய்கிறதோ; அப்படி நாளைக்கான நம் நன்மை தீமைகளையும் நாமே இன்று நம் ஒவ்வொரு அசைவுகளினால் வாழ்தலினால் தீர்மானிக்கிறோம், எனவே என்னதான் கோடி கோடியை பணமாகவோ சொத்தாகவோ சேர்த்தாலும், சேர்ப்பது மட்டுமாகி விடாது வாழ்க்கை. அதை எப்படி நெறி படி சேர்த்தோம் என்பதும் வாழ்வியலில் முக்கியமான ஒன்றாகிறது என்கிறார்.
அப்படி நெறி படி வாழ்தலில், அந்த வாழ்தலின்படி நமக்கான நன்மைகளும் தீமைகளும் வந்தடைகின்றன. எனவே சம்பாதிப்பது மட்டும் நம் கடமையில்லை, வாழ்தலை கண்ணியப் படுத்திக் கொள்ளலும் நம் பொருப்பாகிறது என்கிறது இக்குறள்.
ல்லோருக்குமே பெரிய ஆளாக வேண்டும், நான்கு பேர் மதிக்க கண்ணியமாக வாழ வேண்டும், தன்னை  சரியாக வைத்திருக்க வேண்டும், தான் சார்ந்த உலகம் தன்னை மெச்சிடும் வகையில் தன் வாழ்க்கை அமையவேண்டும் என்று ஓர் ஆசை இருக்கிறது. அந்த ஆசையை அடைவது எப்படி, அங்ஙனம் சரியானவராக ஒருவர் புகழ் நிலைத்து வாழ அந்த வாழ்தல் எப்படி இருந்திடல் வேண்டும் என்றும் திருக்குறள் சொல்கிறது.
அந்த ஆசையினை போல் அப்படி உயர்ந்துவிட்ட மனிதன், தான் உயர்ந்த இடத்தை அடைந்த பிறகு அவன் கடந்து வந்த பாதையை மறக்காத பட்சத்தில் மட்டுமே தனக்கு கீழுள்ளோரை மதிக்கவும் பண்பு கொள்கிறான் என்றெண்ணி; இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்னரே, செய்தது சிறிதாயினும், அந்த சிறு நன்றி யுணர்தல்  குறித்து திருவள்ளுவர் எத்தனை அழகாக சொல்கிறார் பாருங்கள் –
// தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் // எனில் – ஒருவர் மிக சிறு உதவியே செய்திருப்பினும் கூட, அந்த உதவியின் பயனை அறிந்தவருக்கு; அது மாபெரும் செயலாக கருதப் படுகிறதென்கிறார்.
ஒரு பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். ஒருரூபாய்க்கு  பயண சீட்டு வாங்க வேண்டும். கையில் ஏகப்பட்ட வங்கிகள் வழங்கிய பணம் எடுக்கப் பயன்படும் அட்டைகள் இருக்கின்றது. அந்த அட்டையை எந்திரத்தில் தட்டினால் கோடி கோடியாய் பணம் கொட்டும். எல்லாம் சரி தான், ஆனால், அத்தனை வைத்திருந்தாலும் சில்லறை பணம் எடுக்க மறந்தீர்கள் என்று வையுங்கள், நம் பாடு திண்டாட்டம் தான். உதாரணத்திற்கு –
இன்று இத்தனை மணிக்கு சென்று ஒரு பெரிய வேலைக்கு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இன்று பார்த்து ஓட்டுனர் வராமலோ அல்லது மகிழுந்து பழுதுபட்டோ வேறு வழியின்றி அவசர அவசரமாக ஒரு அரசு பேருந்து பிடித்து செல்லக் கூடிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
அவசரத்தில், பணப்பை எடுக்க மறந்து பேருந்தில் ஏறிவிடுகிறீர்கள். பேருந்து கூட்டத்தில் அலைமோதும் நிறைய பேரை ஏற்றிக் கொண்டு பாதி தூரம் வந்து விடுகிறது.   நடத்துனர் கூட்டத்தை விலக்கி விட்டுக் கொண்டு உங்களை நோக்கி வருகிறார். இப்போது, பயணச் சீட்டு வாங்க, ஒரு ரூபாய் நாணயம் வேண்டும்.
நடத்துனர் சீட்டு வாங்கச் சொல்லி கைநீட்டி உங்கள் எதிரே வந்து நிற்கிறார். சட்டை பையில் கைவிட்டு துழாவி பார்த்ததில் வங்கியின் பணம் எடுக்க உதவும் அட்டைகளே கையில் தட்டுப் படுகின்றன. துழாவி தேடி எடுத்ததில் அந்த வங்கி அட்டைகள் போக தொன்னூற்றி ஐந்து பைசா மட்டும் கிடைத்து விடுகிறது. மீதம் ஐந்து பைசா இல்லவே இல்லை. நடத்துனர் முகம் பார்த்தால் மென்று தின்று விடுவார்போல் அப்படி உர்ரென்று இருந்தார்.
‘நாங்க மட்டும் ஐந்து காசு குறைவா கொடுத்தா எவ்வளவு அழுத்தமா சத்தமா சட்டம் பேசி கேட்கிறீங்க அதுபோல நீங்களும் தர வேண்டாமா’ என்று யாரையோ கடிந்துப் பேசிக் கொண்டே வருகிறார். உங்கள் அருகில் இப்போது வந்து விட்டார். நீங்கள் மீண்டும் சட்டை பைகளில் மாறி மாறி துழாவிப் பார்த்து வேறு பணம் இல்லாமையால் பதற்றம் கொள்கிறீர்கள்.
உங்களையே பார்க்கிறார் நடத்துனர். சுற்றி இருக்கும் மக்கள் எல்லாம் உங்களையே பார்க்கிறார்கள். அவசரத்தில் துரிதப் பட்டு தேடியதில் நெற்றி, உடம்பெல்லாம் உங்களுக்கு வியர்த்து விடுகிறது. நடத்துனர் என்னாச்சு எவ்வளோ இருக்கோ கொடுங்க என்கிறார், அவுமானமாக இருக்கிறது உங்களுக்கு.
இல்லை சில்லறை போதவில்லை இறங்கி விடுகிறேன் வண்டியை நிறுத்துங்கள் என்று சொல்ல வருகிறீர்கள். அந்நேரம் பார்த்து, நடத்துனர் உங்கள் அருகில் நெருங்கி உங்களின் கையிலிருந்த சில்லறைகளை வாங்கிக் கொண்டு, சிரித்தவாறே “என்ன சார் சரியாதான் சில்லறை வைத்திருக்கீங்களே, ஒரு ரூபாய் நீங்க கொடுக்காமல் போனால் என்ன ஓடும் பேருந்து சற்று நிற்காது என்றாலும், இப்படித் தேடி தேடி சரியா சிலல்றையை தர உங்களை மாதிரி வாலிபர்கள் இருந்தால் போதும்; நாடு செழிக்கும் சார்” என்று சொல்லிவிட்டு லேசாக உங்களைப் பார்த்து ஒரு கண்ணடித்துவிட்டுப் போகிறார்.
அடுத்த ஓரிரு வினாடிகளில் மக்கள் தங்களை அத்தனை நாணயத்தோடும் மதிப்போடும் பார்க்கிறார்கள். உள்ளே ஒரு பெருமூச்சு எழுகிறது உங்களுக்கு. நடத்துனரின் நன்னடத்தை எண்ணி மகிழ்கிறது உங்கள் மனசு.
யோசித்துப் பாருங்கள், அவர் உங்களுக்கென கொடுத்தது வெறும் ஐந்து காசு  மட்டும் தான். ஆனால், அந்த ஐந்து காசு இல்லாத காரணம் காட்டி இன்று எல்லோருக்கு மத்தியில் உங்களை பேருந்தில்  இருந்து இறக்கிவிட்டுக் கூட உங்களை அவுமாணப் படுத்தி இருக்கலாம். நீங்கள் சரியான நேரத்திற்கு போக முடியாமல் அந்த ஒப்பந்தமே உங்கள் கைவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் அங்கனம் செய்யாது அவர் செய்த இந்த சிறு உதவி எத்தனை பெரிதென்று அதன் பயன் அறிந்தவரே அறிவரென்கிறார் திருவள்ளுவர்.
ரு சின்ன உதவி தான் நம்மை பேராபத்திலிருந்து காக்கிறது. என்றாலும், அதை உதாசீனப் படுத்தாது அதையும் பெரிதாக எண்ணி நன்றியுணர்வு கொள்ளும் பக்குவம் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.
இதுபோன்று ஆயிரத்து முன்னூற்றி முப்பது திருக்குறளை எழுதி, நாம் நகரும் இடமெல்லாம் நம்மோடு வந்து நமக்கு வாழ்வியலை சொல்லித் தரும் பெரும் பயனுள்ள ஒரு நூலாக திருக்குறள் அமைகிறது. அதை வெறும் நூல் என்று சொல்வது கூட அத்தனை மிகையில்லை, அது ஒரு நன்னடத்தையின் ஞானப் பலன். தமிழராகப் பிறந்ததன் பிறவிப் பயன். இன்றைய நம் வாழ்வியலை என்றோ சொல்லிச் சென்ற ஒரு மகானின் மாமனிதரின் வாழ்வியல் சொல்லும் மாமறை.
அது வெறுமனே காக்கப் பட மட்டுலமல்ல ஒவ்வொரு மனிதனும் படித்து தன் வாழ்க்கையினை சீர்செய்துக் கொள்ளவும், நம்மை நடுநிலை படுத்திக் கொள்ளவும், பிற்காலத்தின் மாற்றங்களை இப்பொழுதிலிருந்தே நிகழ்த்திக் கொள்ளவும், நாளைக்கு வேண்டியதை இன்றே ஏற்படுத்திக் கொள்ளவும், உலகச் சமன்பாடுகளில் எல்லாம் உயிர்க்கும் எல்லாம் கிடைக்கும் வண்ணம் நாம்  வாழத் தக்க  நம்மை நெறி படுத்தும் நூலாகவும்  திருக்குறள் அமைகிறது.
எனவே, திருக்குறளில் இருக்கும் தமிழர் பண்பினை, நம் வாழ்வியலை ஒவ்வொருவரும் படித்து, தமிழரின் பண்பு மாறாது வாழ்ந்து, நாளைய நல்லதொரு சமுதாயத்தை இன்றிலிருந்தே உருவாக்குவோம். ஒவ்வொரு தமிழனும் மற்றொரு மனிதருக்கேனும் நல்ல பாடமாய் வாழ்வோம். அதற்கு துணை நிற்கும் திருக்குறளை தினம் ஒரு குறள் வாசிக்கும் முறையிலேனும் வாழ்நாள் முழுதும் மீண்டும் மீண்டும் வாசித்து மனனம் செய்து  அர்த்தம் அறிவோம். அறிந்ததை பிறருக்கும் படிக்கத் தருவோம். இயன்றவரை விழா நடத்தும் இடங்களில், நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும் நாளில் பரிசு கொடுக்கும் பட்சத்தில்; திருக்குறளையே நல் பரிசாகத் தருவோம். திருக்குறளை மொத்த தமிழரும் படிக்க வழிவகை செய்வோம்.
தமிழர் பண்பினை முழுமையாக திருக்குறள் மூலமும் கற்று அதன்படி மேன்மையாக வாழ்ந்து; தமிழரை மீண்டும் உலக அரங்கில் முன்னிலை படுத்துவோம். ஆங்காங்கே அடிமைப் பட்டுக் கிடக்கும் நம் இனத்து மக்கள் அப்படி யொன்றும் சோடைப் போனவர்கள் அல்ல; அவர்கள் இவ்வுலக வாழ்வு முறைகளின், பண்பின், நாகரிகத்தின் முன்னோடிகள் என்று திருக்குறளின் வழி நின்று; வாழ்ந்து; வென்று; முழங்குவோம். தெளிவும், பண்பும், உண்மையோடு வாழ்தலும், பிறருக்கு உதவும் மனமும், எல்லோரையும் மதித்துப் போற்றும் குணமும் எல்லோருக்கும் இயல்பாக வரப் பெறட்டும். அனைத்துயிரும் நலம் பெற்று ஓங்கட்டும். எல்லோருக்கும் நன்றியும் வணக்கமும்!!


காதல் சொல்ல வந்தேன்

காதலித்து பார்...
messenger ல் உன் status மாறும்
friends listல் girl friends குறையும்
உன் mailல் அவள் மட்டும் எழுதுவாள்
எழுதியதிற்கு reply ம் பண்ணுவாள்
...காதலித்து பார்..
cellphone சினுங்கல்கள் அலரல்கள் தரும்
உன் e-mail பார்க்கையில் உதரல்கள் வரும்
உன் friend ற்கு wish பண்ணினால் கோபப்படுவாள்
அவள் போடும் கூச்சலில் நீ காலில் கூட விழுவாய்
காதலித்து பார்..
 

Thursday, June 30, 2011

சனத் ஜெயசூர்யா: தோற்றுப்போன சாதனையாளன்!




சனத் ஜெயசூர்யாவின் 42வது பிறந்த தினம் இன்று. 2 நாட்களுக்கு முன்னர் வரை இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கட் ஆடியவர். இலங்கை அணி, 1996ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணம் பெற முக்கிய காரணமாய் அமைந்தவர். மாத்தறை மாவட்டத்திலிருந்து அதிக விருப்பு வாக்குகள் பெற்ற அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர். இப்படி பல அறிமுகங்களுக்கு சொந்தக்காரர் சனத்!

இலங்கை கிரிக்கட் வரலாற்றை முரளியும்- சனத்தும் இன்றி எழுதிவிட முடியாது. அதிக பக்கங்களை இவர்கள் இருவருமே எடுத்துக்கொள்வார்கள். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் முரளி டெஸ்ட் போட்டிகளிலிருந்து 800 விக்கட்டுக்கள் பெற்று ஓய்வுபெற்றிருந்தார். சனத்தும் தன்னுடைய 22 வருட சர்வதேச கிரிக்கட் வாழ்க்கையை விருப்பமின்றி நேற்றுமுன்தினம் முடித்துக்கொண்டார் அல்லது முடித்துக்கொள்ள அறிவுத்தப்பட்டார்.

ஒரு பொக்ஷிங்டேயில், அதாவது 1989 டிசம்பர் 26ஆம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச கிரிக்கட்டை 20 வயது சனத் ஜெயசூர்யா ஆரம்பிக்கிறார். அந்தப் போட்டியில் 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கிறார். இலங்கை அணி 30 ஓட்டங்களினால் தோற்றுப்போகிறது. அப்போது, யாரும் நினைக்கவில்லை சனத் கிரிக்கட்டின் பலதுறைகளிலும் சாதனைகளை தன்னகத்தே கொண்டுவரப்போகிறார் என்று!

ஒருநாள் கிரிக்கட்டின் ஆரம்ப அதிரடி ஆட்டத்தை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய தேர்வுக்குழு தலைவருமான சிறிகாந்த் ஆரம்பித்து வைத்தார். ஆனாலும், அதனை பலமடங்கு உயர்த்திக்காட்டி பலரையும் தன்னுடைய ஆட்ட தன்மையை பின்தொடர வைத்த பெருமை சனத்துக்கு உண்டு. அதுவும், களுவிதாரண என்கிற சக வீரருடன் அவரின் ஆரம்ப துடுப்பாட்டம் கிளாசிக் ரகம்.

என்னுடைய அறிவுக்கு எட்டிய வரையில் 22 வருடங்கள் சர்வதேச கிரிக்கட் ஆடியவர்கள் சனத்தும்- சச்சினும் மட்டுமே. சச்சின் இன்னும் 2 ஆண்டுகளாவது சர்வதேச கிரிக்கட்டில் நிலைத்திருப்பார் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவரிலும், ஒருநாள் ஆட்டங்களில் ‘மச் வின்னர்’ என்ற சொல்லுக்கு சச்சினைவிட, சனத்தே பொருத்தமானவர். ஓட்டங்கள்- விக்கட்டுக்கள் என்று தொடர்ந்தும் சகலதுறை வீரராக வலம் வந்தவர். டெஸ்ட் ஆட்டங்களில் சச்சினை, சனத்தினால் எந்தக்காலத்திலும் நெருங்கக்கூட முடியவில்லை.

இப்படி, இலங்கை அணியினை பல தருணங்களில் தனியொரு வீரராக தோளில் சுமந்த சனத் ஜெயசூர்யா இறுதி 4- 5 வருடங்களில் நடந்து கொண்ட விதம், அவரின் சாதனைகளை மறக்க வைத்துவிட்டது. 42 வயதான சனத் ஜெயசூர்யா ஆரம்ப வீரராக ஆடுகிறார். அதே அணியில் 21 வயது டினேஸ் சந்திமால் உதிரி வீரராக ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

‘கனவான்’ வீரர்கள் தங்களுடைய ஆட்டத்திறன் ஓரளவு குறைகின்றது என்று தெரிகிறபோதே ஓய்வுபெற்று இளம் வீரர்களுக்கு வழிவிடுவதே அவர்களுக்கும்- அணிக்கும் நல்லது. அதனைவிடுத்து, ஓய்வுபெற மாட்டேன் என்று அடம்பிடிப்பது புதிய வீரரொருவருக்கான இடத்தை பிடித்துக்கொண்டிருப்பதாகவே அர்த்தப்படும். அதனையே, சனத் இறுதி 5 வருடங்களில் செய்து கொண்டிருந்தார். இதனால், பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

உள்ளூர் ஆட்டங்களில் சிறப்பாக தொடர்ந்தும் செயற்பட்ட ஜீவன் மென்டிஸ் தன்னுடைய சர்வதேச கிரிக்கட் அறிமுகத்தை 28 வயதில் மேற்கொள்ள வேண்டிய நிலையெல்லாம், சில சிரேஸ்ட வீரர்களின் அடம்பிடிப்புக்களினாலும் நிகழ்கிறது. இது சின்ன உதாரணம் மட்டுமே. சர்வதேச போட்டிகளில் ஆடுவதற்கு இளம் வீரர்களுக்கு அனுபவம் அவசியமாகிறது. அதனைப்புரிந்து கொண்டு சிரேஸ்ட வீரர்கள் செயற்படுவதும் முக்கியமானது. ஆனால், அதனை சனத் அதிக தருணங்களில் நிறைவேற்றவில்லை.

டெஸ்ட் ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் ஆடியது வரலாறு. அதுபோல, 15 மாதங்களுக்கும் அதிக காலம் சர்வதேச போட்டிகள் எதிலும் ஆடாத அவர், அரசியலுக்கு சென்ற தருணத்திலாவது சர்வதேச கிரிக்கட்டிலிருந்து ஒதுங்கியிருக்கவேண்டும். அதனையும் செய்யாமல், மீண்டுமொரு சர்வதேசப் போட்டியிலேயே ஓய்வுபெறும் அறிவிப்பை வெளியிடுவேன் என்று அடம்பிடிப்பது ஒரு சாதனை வீரனுக்கு அழகல்லவே.

இலங்கையில் மட்டுமல்ல கிரிக்கட் விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் சனத்தின் அதிரடி ஆட்டத்தினை பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர். கிரிக்கட்டில் ஆர்வமின்றியிருந்த என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான சிறுவர்களை (1996இல் சிறுவன்) அதன்பக்கம் ஈர்த்த பெருமை அவருக்குண்டு. ஆனால், அவர் இறுதிக் காலங்களில் நடந்து கொண்ட விதம் அவரின் மீதான மரியாதையை குறைக்கவே செய்தது.

சனத் ஜெயசூர்யா அவர்களே….! நீங்கள் சாதனை வீரர்தான். ஆனால், இறுதிக் காலங்களில் தோற்றுப்போய்விட்டீர்கள். எதுஎப்படியோ, குடும்ப வாழ்க்கை சிறக்க வாழ்த்துக்கள். ஏனெனில், அரசியலில் உங்களினால் நிலைத்து நிற்க முடியாது என்று நம்புகிறேன்!!

காலண்டர் கவிதை




நீ கண்விழிப்பதே
என்னைக் கொல்லத்தானா
கதறுகிறது தினக்காலண்டர்

***

சன்டேயில்கூட எனக்கு
விடுமுறையில்லை
கிழிக்கமறந்த சனிக்கிழமை

***

பலன் பார்த்த பாலகன்
அம்மா பாக்கெட்மணி தருவியா
துலாம் - பணக்கஷ்டம்

***

செத்தவீடு
பலித்த பலன்
விருச்சிகம் – விடுதலை

***

அடித்த அலாரம்
விழித்த நான்
கிளாஸ் ஓவர்

***

உலகமே பாட்டுக்கு
பிழையாய் வாயசைக்கிறது
காதில் ஹெட்செட்
 
***

நினைக்க முயன்று தோற்றுப்போகிறேன்
விழித்தபடி குருட்டை உணர்ந்த கும்மிருட்டில்
காதோரம் ஒலித்த கடைசிப்பாடல்

விதியின் ஊஞ்சல்

விழிகளுக்கும் இமைகளுக்கும்
மத்தியில்
விதியின் ஊஞ்சல்...
இமைக்கும் நொடிக்குள் நூறுமுறை
ஆடி ஓய்கிறது

எதிர்பார்க்கை நூலில்
எழுந்து உயரும் பட்டம்,
அறுக்கப்பட்ட நூலோடு
நிர்வாணமாய்..

சாளரங்கள் திறந்தும்
சாலைகள் மூடப்பட்டும்;
எலிகளின் ஆட்சிக்கு மட்டுமாய்
சோபனை தெருக்கள்

வெடிகுண்டுகளோடு வரவேட்பறைகள்
வேர்களை இழந்த வேதாந்தங்கள்
சுண்டிவிடப்படும் பக்கத்துக்கு
சரிந்து விழும் சித்தாந்தங்கள்

இதழ்களில் சிரித்து
இருதயத்தில் நாண் ஏற்றும்
செயற்கை மானுடம்

களவெடுப்பவனுக்கு காலாண்டு சிறை
கண்ணீர் விடுபவனுக்கு ஆயுள் தண்டனை
கால்போன இடமெல்லாம்
காற்றுவாங்கப் போகும் சட்டங்கள்

சமுதாய சந்தையில் பொதுநலம் விற்று
சுயநலம் வாங்க வேண்டும்
தொழிலில் தேர்ந்தவர்  சொன்னார்
"பொதுநலத்தை விட சுயநலத்துக்கு
கிராக்கி " இருக்கிறதாம்!

Sunday, June 26, 2011

என்னமோ ஏதோ..

படம்: கோ
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
கவிஞர்: மதன் கார்கி
பாடியவர்
கள்  : ஆலாப் ராஜு, பிரசாந்தினி, ஸ்ரீசரண், எம்சீ ஜாஸ்



என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!! 

என்னமோ ஏதோ மின்னி மறையுது விழியில்..
அண்டி அகலுது வழியில்.. 
சிந்திச் சிதறுது விழியில்!! 

என்னமோ ஏதோ சிக்கித் தவிக்குது மனதில் ..
றெக்கை விரிக்குது கனவில்.. 
விட்டுப் பறக்குது தொலைவில்!! 

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!! 

நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா? 
பூவே.. 

முத்தமிட்ட மூச்சுக் காற்று பட்டு பட்டு கெட்டுப் போனேன்.. 
பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப் போனேன்.. 

நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்.. 
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் அச்சாகும்..
சிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்!

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!


நீயும் நானும் யந்திரமா?
யாரோ செய்யும் மந்திரமா?
பூவே.. 

எங்களின் தமிழச்சி 
என்னமோ ஏதோ you're lookin so fine,
மறக்க முடியலையே என் மனமின்று ..
உன் மனசோ lovely இப்படியே இப்ப, 
உன்னருகில் நான் வந்து சேரவா என்று..

Lady lookin like a cindrella cindrella..
Naughty looku விட்ட தென்றலா?
Lady lookin like a cindrella cindrella..
என்னை வட்டமிடும் வெண்ணிலா..

சுத்தி சுத்தி உன்னைத் தேடி.. 
விழிகள் அலையும் அவசரம் ஏனோ? 
சத்த சத்த நெரிசலில் உன் சொல்..
செவிகள் அறியும் அதிசயம் ஏனோ?

கனாக்கானத் தானே பெண்ணே  கண்கொண்டு வந்தேனோ? 
வினாக்கான விடையும் காணக் கண்ணீரும் கொண்டேனோ?
நிழலைத் திருடும் மழலை நானோ?

ஏதோ .. எண்ணம் திரளுது கனவில்..
வண்ணம் பிறழுது நினைவில்..
கண்கள் இருளுது நனவில்!!

ஓஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்..
வெட்டி எறிந்திடும் நொடியில்..
மொட்டு அவிழுது கொடியில்!!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை!!
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிப் பேழை..
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை!! 

நட்பு + இசைவாக்கம் + நெகிழ்வுத்தன்மை







நாம் வாழ்க்கையை எப்படி எதிர்நோக்குகிறோமோ, அப்படித்தான் வாழ்க்கை இருக்கும் என்று சொல்லுவார்கள். என்னதான் ஒரு மனிதன் வெளியே சிரித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே ஏதாவது ஒரு குறை அல்லது கவலை குடிகொண்டுஇருக்கும். அண்மையில் வாசித்த ஒரு உளவியல் பதிவில் ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள்.
"நீங்கள் தனியாக கடற்கரையில், அலைகள் வந்து வந்து போவதைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறீர்கள். உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?
க்கேள்விக்கு விடையை சொல்லிவிட்டு மேலே படியுங்கள். அதாவது நீங்கள் இந்தக்கேள்விக்கு என்ன விடை சொல்லியிருந்தீர்களோ, அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையை எதிர் நோக்குகிறீர்கள் என்று அர்த்தம். இதே கேள்வியை நான் நண்பர்கள் சிலரிடமும் கேட்டுப் பார்த்தேன், சோகம், மகிழ்ச்சி, விடாமுயற்சி போன்று பல்வேறு விடைகள் சொன்னார்கள்.உண்மையில் பலருக்கு இது சரியாகவே அமைந்தது.

கிறிக்கட் போட்டி ஒன்றில் விளையாட முதல் கிறிக்கற் வீரர்கள் உஷ்ணப்படுத்தும் அப்பியாசங்களை செய்துகொள்வார்கள். அதற்குக்காரணம், திடீரென உடல் ஒரு செயலில் ஈடுபடும் போது தசைப்பிடிப்போ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். எனவே அதற்கு உடலை இசைவாக்கிக் கொள்ள அவர்கள் உடற்பயிற்சிகளை செய்வர்கள்.



அது போலதான் இதுவரை மந்தமாக அல்லது ஒரு சுவாரஸ்யமற்று சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட மகிழ்ச்சிகரமான சூழல், நட்புவட்டம் அல்லது ஒரு குறிப்பிட்ட நட்பினால் ஏற்பட்ட மகிழ்ச்சியில் திளைத்தவர்களுக்கு ஒரு பிரச்சினை வரும் போது அதை ஏற்றுக் கொள்ளமுடிவதில்லை, அதன் காரணமாக நண்பர்களாகி ஒரு மாதங்கூடக் கடக்காத நிலையில் பலர் இன்று நட்பை முறித்துக் கொண்டு முகங்கொடுத்தும் பேசமுடியாமல் திரிவதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அதற்குக் காரணம் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பலருக்கு இருப்பதில்லை. இவர்கள் சூழலில் எது நடந்தாலும் அது தமக்கு நடப்பதாக தம்மை அதற்குள் உள்வாங்கி யோசிப்பார்கள், விட்டுக் கொடுக்க மாட்டார்கள், நடக்கும் சம்பவங்களை தமக்காகவே நடப்பதாக உணர்த்த முற்படுவார்கள், எனவே தேவையற்ற சூழ்நிலைகளை உருவாக்கிக்கொண்டும் தேவையில்லாத விடயங்களை தமக்கே நடைபெறுவது போல உள்வாங்கிக்கொண்டும் உங்களைக்குழப்பிக்கொள்ளாதீர்கள் வாழ்க்கை சூனியமாகிவிடும்.

நண்பர்களிடையே பிரச்சினைகள் வரும் போது முடிந்தளவு அதிகம் கோபமாக பேசாதீர்கள் அல்லது பேசாமலே இருங்கள். பேச்சுக்களில் ஆரம்பித்து முறிந்த கைகள் ஏராளம். இரண்டு நாட்களின் பின்னர் பேசும் போது கோபங்கள் ஆறிப்போயிருக்கும். நியாயம் யார்பக்கம் இருந்தாலும் தவறைச் சுட்டிக்காட்டுங்கள்.முக்கியமாக எதையுமே ஊகித்து முடிவெடுக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேரே சொல்லிவிடுவது நலம்.

முகத்துக்கு நேரே சில விடயங்களை சொல்லிவிடுவது இரு விடயங்களுக்கு நல்லது. 
-1-மனதில் எந்தப் பாரமும் இல்லை.
-2-நாம் முட்டாள்கள் இல்லை என்பது மற்றவருக்கு உணர்த்தப்படும்
                                                                                                           - ஹரிகரன்
கட்டாயம் சிலரை நண்பர்களாக வைத்திருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதற்காக அவர்களுடன் கதைக்காமல் விடவேண்டும் என்றும் கட்டாயம் இல்லை. ஒரே விருப்பு வெறுப்புக்கள், ஒரே மாதிரியாக ஆர்வங்கள் உள்ளவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். எனவே ஒரே அலைவரிசையில் உள்ளவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்களை சூழலுக்கேற்றவாறு இசைவாக்கப் பழகுங்கள்.

டிஸ்கி: கண்ணுக்கு முன்னால் நடக்கும் சில விடயங்களுக்கு பார்வையாளனாக இருந்து பார்த்ததால் எழுதப்பட்ட பதிவு இது. வேற எதுவுமில்லைங்கோ..:-)

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை (:H)

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உழுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.



"முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு முடிவெடுத்து, அதையே கடைப்பிடிச்சு வந்தாங்களாம்.

ஒருநாள் விருந்தூர் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு போட்டி ஒன்று வைக்கப்பொவதாக அறிவிச்சாங்களாம். அதாவது மன்னரின் பிறந்தநாளுக்குயார் சிறந்த தின்பண்டம் செய்து கொண்டு வந்து தாறாங்களோ, அவங்களுக்கு "ஆண்டின் சிறந்த தின்பண்டி" என்ற பட்டம் குடுப்பதாக சொன்னாங்களாம்.

போட்டிதினத்தன்று அனைவரும் மைதானத்தில் கூடியிருந்தாங்களாம். அப்ப போட்டி ஆரம்பிச்சது. உழுந்தூர்க்காரர்களும், பருப்பூர்க்காரர்களும் மும்முரமாப் போட்டியில் கலந்து தங்கள் தின்பண்டங்களைச் தயாரிக்க ஆரம்பிச்சாங்களாம். முதலில் செய்து முடிக்கிறவங்களுக்கு போனஸ் பொயின்ஸ் கிடைக்கும் என்று தீடீரென மன்னர் அறிவிக்க, உடனடியா உழுந்தூர்க்காரர்கள், "எனக்குத்தான்.. எனக்குத்தான்.. இந்தாங்க உழுந்து வடை" என்று சத்தமாச் சொல்லிட்டு உழுந்துவடையை எடுத்திட்டு மன்னரிடம் போனாங்களாம்.

உடனே சாக்கான பருப்பூர்க்காரனுகள், என்னடா இது என்று பார்க்க, வழக்கம்போல ஒரே மாதிரி வடை சுட்டு இரண்டு பேரும் பரிசைப் பகிர்ந்துக்கலாம் என்ற கொள்ளையை மீறி உழுந்தார்க்காரனுகள் கிரியேட்டிவிட்டியாக யோசிச்சு உழுந்து வடையில் ஓட்டை போட்டு அதன் தொடு மேற்பரப்பைக் கூட்டி சீக்கிரமா வடையைப் பொரிய வச்சு ஜெயித்து தூரோகம் செய்ததால், அன்றிலிருந்து உழுந்தூர்க்காரனுகளை எதிர்க்கும் நோக்கில் பருப்புவடையில் ஓட்டை போடுவதில்லையாம்"

என்று அமைச்சர் பருப்பு சொல்லிமுடிக்க, எங்கேயோ கருகிற வாசனை வர திடுக்கிட்டு எழுந்து பார்த்தா அடுப்பில் ஆசைஆசையாய் உழுந்து வடை சுட்டுச் சாப்பிடலாம் என்ற எனது நினைப்பில் பாழாய்ப்போன அடுப்பு அதிகமாய் எரிந்து வடையை கருக்கி எனது வயிற்றில் மண்ணைப் போட்டிருந்தது.

"ஐயோ வடபோச்சே...."

தினமும் GOOGLE கிட்டார் வாசிக்கலாம் வாங்க

Google பெரும்பாலும் ஒவ்வொரு நாளையும் யாராவது ஒரு பிரபலத்தை நினைவுபடுத்தும் நோக்கில் தனது பக்கத்தை அவர்களின் ஞாபகச்சின்னங்களால் வித்தியாசமாக சுவரஸ்யமாக அலங்கரிக்கும்.

அந்த வகையில் கடந்த ஜுன் 9ம் திகதி இசையமைப்பாளர், கண்டுபிடிப்பாளர், பாடலாசிரியர் ஆகிய பல திறமைகளைத் தன்னகத்தே வைத்திருந்த LES PAULஐ நினைவு படுத்தும் நோக்கில் ஒரு எலக்ரிக் கிட்டாரை தனதுhttp://www.google.lkஎன்ற பக்கத்தில் வழங்கியிருந்தது.

அன்றைய தினம் முழுவதும் நான் அந்த கூகிள் பக்கத்துடனேயே அதிக நேரத்தைச் செலவிட்டிருந்தேன். ஆனாலும் சிறு ஏக்கம் அதை Google எங்களுக்கு ஒரு நாள் மட்டும்தான் வழங்கும் என்று. அந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்யும் நோக்கில் கூகிள் நிறுவனம் அதை எங்களுக்கு நிரந்தரமாக வழங்கியுள்ளது.

இந்த அற்புதமான கிட்டாரை கூகிள் வழங்கக்காரணமாக இருந்த LES PAULக்கும், இதை எங்களுக்கு வழங்கிய GOOGLEக்கும் மனமார்ந்த நன்றிகள்.



இந்தச்சுட்டியைக் கிளிக்கி கிட்டார் வாசிக்கலாம் வாங்க.

http://www.google.com/logos/2011/lespaul.html

நான் மட்டும் இங்கே..!

வைகாசி முழுநிலவு
வண்ணம் கலையாமலிருக்க...
ஊரு சனம் எல்லாம்
வண்டி கட்டி சென்றது
வைகையாற்றங்கரையில்
நிலாச் சோறு சாப்பிட...
நான் மட்டும் இங்கே
நீயின்றி நீட்டிப் படுத்திருக்கிறேன்
நம் வீட்டில் அமாவாசையாய்..!